பன்றி காய்ச்சலுக்கு இயற்கை வைத்தியம்

இந்தியாவில் விரைவாக பரவிவரும் காய்ச்சல் பன்றி காய்ச்சல்... பன்றி காய்ச்சல் என்றாலே எல்லோரும் பயந்து நடுங்குகின்றனர். உயிரை பறிக்க கூடிய காய்ச்சல் என்று உதறல் எடுத்து நடுங்குகின்றனர்.

பன்றி காய்ச்சல் அவ்வளவு கொடுமையானதா? உயிர் பறிக்கும் அளவிற்கு கொடுமையானதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சாதாரண காய்ச்சல் வந்தால் கூட பன்றி காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகமே பலரின் பயத்திற்கும் காரணம்.

பயம் வேண்டாம். பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் இவைதான்.

உங்களுக்கு இப்படி இருந்தால் உடனடியாக தக்க மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டால் பன்றி காய்ச்சல் பறந்து போய்விடும்.

பன்றி காய்ச்சலுக்கு இயற்கை வைத்திய முறையும் உண்டாம். அதுபற்றி சித்த மருத்துவ நிபுணர் தெ. வேலாயுதம் கூறியதாவது.

சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு "யுகி' என்ற முனிவர் கண்டுபிடித்த "கபசுரக் குடிநீர்' (தூள்) சித்த மருந்து பலன் அளிக்கும். நிலவேம்பு, கண்டுபாரங்கி என்று அழைக்கப்படும் சிறுதேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவள்ளி, சீந்தில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், அக்ரஹாரம் ஆகிய மூலிகைகளை சம அளவில் எடுத்து

"கபசுரக் குடிநீர்' தயாரிக்கப்படுகிறது. இந்த "கபசுரக் குடிநீர்' அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

தொண்டை கரகரப்பு ஏற்படும் ஆரம்ப நிலையில் சித்த மருத்துவரிடம் சென்று "தாளிசாதி வடகம்' (மாத்திரை) சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைக்கும். பன்றிக் காய்ச்சல் என உறுதிப்படுத்தப்படும் நிலையில் "கபசுரக் குடிநீரை' கஷாயமாக காய்ச்சிக் குடித்தால் பலன் கிடைக்கும்.

அதாவது, நான்கு தேக்கரண்டி தூளை, 200 மில்லி லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டுவதன் மூலம் கிடைக்கும் 60 மில்லி லிட்டர் கஷாயத்தை வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாள்கள் குடிக்க வேண்டும்' என்றார் டாக்டர் தெ.வேலாயுதம்.