இளம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு

இளம் வயதினருக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு வருகிறது. ஆரம்பத்தில் கண்டறிந்தால், முற்றிலும் குணப்படுத்தலாம். 40 வயதுக்கு மேலான பெண்கள், ‘மேமோகிராம்’ செய்து கொள்வது அவசியம்; ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரும்’ என்கிறார் சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனை, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயக்குமார். அக்டோபர் மாதம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பான கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள்:

மார்பக புற்றுநோய் பாதிப்பு எந்த அளவில் உள்ளது; அக்டோபரில், பிரத்யேகமாக விழிப்புணர்வு மாதம் கொண்டாடுவது ஏன்?

உலக அளவில், பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில், மார்பக புற்றுநோய் முதல் இடத்தில் உள்ளது. உலகில் ஆண்டுதோறும், 1.4 கோடி பெண்களும், இந்தியாவில், 1.15 லட்சம் பெண்களும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில், 73 லட்சம் பேரும், இந்திய அளவில், 53 ஆயிரம் பேரும், இதனால் இறக்கின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். எனவே, அக்டோபர் மாதம், விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப் படுகிறது.


இது பாரம்பரிய நோயா? இதற்கான காரணம் என்ன?

வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், உணவு பழக்கம், உடல் பருமன் அதிகரிப்பு, மரபணு மாற்றங்கள், குழந்தை பேறு இல்லாமை, 12 வயதுக்கு முன் மாதவிடாய் துவங்குதல், 54 வயதிற்கு பிறகும் மாதவிடாய் நீடிப்பது, கதிர்வீச்சுக்கு உட்படுதல் போன்றவற்றால், மார்பக புற்றுநோய் வருகிறது.

குடும்பத்தில், முன்னோரில், ஏதேனும் ஒரு நபருக்கு, இந்த பாதிப்பு இருந்திருந்தால், சந்ததியினருக்கு, 20 சதவீதம் வர வாய்ப்புள்ளது.

எந்த வயதில் நோய் பாதிக்கும்? ஆண்களையும் பாதிக்குமா?
பொதுவாக, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு வரும். தற்போது, இளம் வயது பெண்களுக்கு, 30 வயதிலும் வருகிறது. ஆண்களுக்கும், ஒரு சதவீதம் மார்பக புற்றுநோய் பாதிப்பு வருகிறது.


அறிகுறிகள் என்ன? வெளிப்படையாக தெரியுமா?

ஆரம்ப நிலையில், எந்த அறிகுறியையும் காட்டு வதில்லை. ஆனால், நோய் பரவ பரவ, மார்பகத்தின் தோற்றம் மாறுபடும்; தொடுதலின்போது வித்தியாசத்தை உணர முடியும். தாக்கம் அதிகரித்தால் மார்பகம், அக்குள்களில் வீக்கம் ஏற்படும்.

மார்பின் மேல் உள்ள தோலில் மாற்றங்கள் தெரியும்.மார்பக காம்புகளில் சாதாரண திரவம்; ரத்தத்துடன் கூடிய திரவம் கசிதல்; மார்பு காம்புகள் உட்புறமாக திரும்பிக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். முற்றிய நிலையில், முதுகு வலி, மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படலாம்.

இதற்கான சிகிச்சை முறைகள் என்ன? முற்றிலும் குணப்படுத்த முடியுமா?

மார்பக புற்றுநோய் கட்டிகளை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. புற்று நோயை மருந்துகள் மூலம் குணப்படுத்தும் முறையே கீமோதெரபி எனப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின், 21 நாட்களுக்கு ஒருமுறை, ஆறு முதல் எட்டு தவணைகளில், கீமோதெரபி தரப்படும்.முற்றிய நிலை என்றால், மார்பகத்தை அகற்ற வேண்டிய நிலை வரலாம்; அகற்றினால், வேறொரு பகுதியில் இருந்து தசையை எடுத்து வைத்து, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம், மார்பகத்தை உருவாக்க முடியும்.

மார்பக புற்றுநோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிந்தால், முற்றிலும் குணப்படுத்த முடியும். பாதிப்பில் நான்கு நிலைகள் உள்ளன. முதல் இரண்டு நிலைகளில், 95 சதவீதமும், மூன்றாம் நிலையில், 50 சதவீதமும் காப்பாற்ற முடியும். நான்காம் நிலையில் காப்பாற்றுவது கடினம்; 10 சதவீதம் பேரை குணப்படுத்த வாய்ப்புள்ளது.

கீமோ தெரபியால் பக்க விளைவுகள் அதிகம் என்கிறார்களே?
கீமோ தெரபி கொடுக்கும்போது, வாந்தி, முடி உதிர்தல், அசதி மற்றும் ரத்த அணுக்கள் குறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். வாந்தி, அசதி போன்றவை, ஓரிரு நாட்களில் சரியாகி விடும். கீமோ தெரபி சிகிச்சை முடிந்ததும், உதிர்ந்த முடிகள் தானாக வளர ஆரம்பித்து விடும்; முடியை விட உயிர் முக்கியம் என்பதை உணருங்கள்.

மார்பக சுய பரிசோதனை செய்வது அவசியமா? அதற்கான வழிமுறைகள் என்ன?

பொதுவாக, 20 வயதுக்கு மேலான பெண்கள், மாதம் ஒரு முறை, தங்கள் மார்பகங்களை தாங்களே, கையால் அழுத்திப் பார்த்து, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண்ணாடி முன் நின்று, இரண்டு மார்பகமும் தோற்றத்தில் ஒன்றாக உள்ளதா; ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா; சருமத்தில் மாற்றம் உள்ளதா; காம்பு பகுதி உள் இழுக்கப்பட்டுள்ளதா என, பார்க்க வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், உடனே, டாக்டரிடம் செல்வது முக்கியம்.

‘மேமோகிராம்’ என்றால் என்ன?; நவீன சிகிச்சை முறையா?

மார்பகத்தை, ‘எக்ஸ் – ரே’, ‘ஸ்கேன்’ மூலம் பரிசோதிப்பதே, ‘மேமோகிராம்’ எனப்படுகிறது. அறிகுறிகள் ஏதும் தெரியாத நிலையில், இப்பரிசோதனையில், மார்பக புற்றுநோய் பாதிப்பை கண்டறிய முடியும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறை, இந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

ஆண்டுதோறும், டாக்டர்களின் ஆலோசனைப்படி, உடல் நல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்த உறவுகளில் யாருக்கும் மார்பக புற்று நோய் இருந்தால், தொடர் பரிசோதனை அவசியம்.

குடும்பத்தில், பலருக்கு புற்றுநோய் இருந்தால், ஒட்டு மொத்த குடும்ப நபர்களும், டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். கொழுப்பு சத்துள்ள உணவைத் தவிர்ப்பதோடு, உடல் பருமனையும் குறைக்க வேண்டும். காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மன அழுத்தத்தில் சிக்கி விடக் கூடாது. தியானம், எளிய உடற்பயிற்சிகள் செய்வதால், பாதிப்பு வராமல் தப்ப முடியும்.

பன்றி காய்ச்சலுக்கு இயற்கை வைத்தியம்

இந்தியாவில் விரைவாக பரவிவரும் காய்ச்சல் பன்றி காய்ச்சல்... பன்றி காய்ச்சல் என்றாலே எல்லோரும் பயந்து நடுங்குகின்றனர். உயிரை பறிக்க கூடிய காய்ச்சல் என்று உதறல் எடுத்து நடுங்குகின்றனர்.

பன்றி காய்ச்சல் அவ்வளவு கொடுமையானதா? உயிர் பறிக்கும் அளவிற்கு கொடுமையானதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சாதாரண காய்ச்சல் வந்தால் கூட பன்றி காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகமே பலரின் பயத்திற்கும் காரணம்.

பயம் வேண்டாம். பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் இவைதான்.

உங்களுக்கு இப்படி இருந்தால் உடனடியாக தக்க மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொண்டால் பன்றி காய்ச்சல் பறந்து போய்விடும்.

பன்றி காய்ச்சலுக்கு இயற்கை வைத்திய முறையும் உண்டாம். அதுபற்றி சித்த மருத்துவ நிபுணர் தெ. வேலாயுதம் கூறியதாவது.

சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு "யுகி' என்ற முனிவர் கண்டுபிடித்த "கபசுரக் குடிநீர்' (தூள்) சித்த மருந்து பலன் அளிக்கும். நிலவேம்பு, கண்டுபாரங்கி என்று அழைக்கப்படும் சிறுதேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவள்ளி, சீந்தில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், அக்ரஹாரம் ஆகிய மூலிகைகளை சம அளவில் எடுத்து

"கபசுரக் குடிநீர்' தயாரிக்கப்படுகிறது. இந்த "கபசுரக் குடிநீர்' அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

தொண்டை கரகரப்பு ஏற்படும் ஆரம்ப நிலையில் சித்த மருத்துவரிடம் சென்று "தாளிசாதி வடகம்' (மாத்திரை) சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைக்கும். பன்றிக் காய்ச்சல் என உறுதிப்படுத்தப்படும் நிலையில் "கபசுரக் குடிநீரை' கஷாயமாக காய்ச்சிக் குடித்தால் பலன் கிடைக்கும்.

அதாவது, நான்கு தேக்கரண்டி தூளை, 200 மில்லி லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டுவதன் மூலம் கிடைக்கும் 60 மில்லி லிட்டர் கஷாயத்தை வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாள்கள் குடிக்க வேண்டும்' என்றார் டாக்டர் தெ.வேலாயுதம்.

பன்றி காய்ச்சல் பயமா? சந்தேகமா இருக்கா?

பன்றி காய்ச்சல் பயமா? உங்களுக்கு அது வந்திருக்குமோன்னு சந்தேகமா இருக்கா? அப்படின்னா தொடர்ந்து இதைப் படிங்க...!

1 ) . பன்றிக் காய்ச்சலுக்கு அறிகுறியாக அதிக காய்ச்சலும் , உடம்பு வலியும் ஏற்படும் . இது சாதாரண காய்ச்சல் என்று நீங்கள் நினைக்கலாம் .

ஆனால் மாத்திரை எடுத்துக் கொண்ட பிறகும் சரியாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகவும் .

2 ) . சாதாரண மூகமுடிகள் பயன்படாது . என்-95 வகை மூகமுடிகளை தான் பயன்படுத்த வேண்டும் .

3) . உங்களால் மூச்சு விட சிரமமாக இருந்தாலோ அல்லது உங்கள் குழந்தைகள் சோர்வு அடைவது போன்று தெரிந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும் . பன்றிக் காய்ச்சல் நிமோனியாவாக மாறினால் மிகவும் ஆபத்து .

4 ) . உங்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு இந்த நோய் புதிதல்ல . இந்த வைரஸ் கிருமிகள் காற்றில் 2009 ஆண்டு முதல் இருந்து வருவதால் , நமது உடம்பு இதற்கு ஏற்றாற் போன்று எதிர்ப்பு சக்தியை உருவாக்கி இருக்கும் .

5 ) . என் 95 மூகமுடியை அணியும் போது தொற்று ஏற்படாதவாறு மக்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும் .

6 ) . பன்றிக் காய்ச்சல் முழுமையாக குணப்படுத்தக்கூடிய நோய் . எனவே பயப்பட வேண்டாம் .

7 ) . பன்றிக் காய்ச்சல் இருப்பதை மருத்துவமனையில் பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

தாம்பத்தியம் இனிக்க இப்படி செய்யுங்க..!

அ‌ந்த கால‌த்‌தி‌ல் தா‌ம்ப‌த்ய‌ம் எ‌ன்பது குழ‌ந்தை‌ப் பெ‌ற்று‌க் கொ‌ள்வத‌ற்கான ஒரே வ‌ழி எ‌ன்று இரு‌ந்தது. தா‌ம்ப‌த்ய‌ம் எ‌ன் பது ஒரு இரு‌ட்டறை‌க்கு‌ ள் ‌நிகழு‌ம் ‌நிக‌ழ்வாகவு‌ம் கருத‌ப்ப‌ட் டது. ஆனா‌ல் த‌ற்போது ப‌ள்‌ளி‌ப்பரு வ‌த்‌திலேயே தா‌ம்ப‌த்‌திய‌ம் ப‌ற்‌றி பரவலா‌க‌ப் பே‌சி‌க்கொ‌ள்ளு‌ம் அள‌வி‌ ற்கு தொலை‌க்கா‌ட்‌சிகளு‌ம், ப‌த்‌தி‌ரி‌க் கைகளு‌ம் வெ‌ளி‌ச்ச‌த்‌தி‌ற்கு‌க் கொ‌ ண்டு வ‌ந்து ‌வி‌ட்டன.

இ‌‌ன்றைய சமூக‌த்‌தின‌ர் தா‌ம்ப‌த்‌திய‌ம் ப‌ற்‌றி அ‌றி‌ந்து கொ‌ள் ள வே‌ண்டிய வய‌தி‌ற்கு மு‌ன்கூ‌ட்டியே அ‌றி‌ந்து கொ‌ண்டு அ‌த‌ன் ‌மீதான ஆ‌ர்வ‌த்தை வள‌ர்‌த்து‌க் கொ‌ள்‌கிறா‌ர்க‌ள்.

அ‌தீத ஆ‌ர்வமு‌ம், அதனை வெ‌ளி‌ப்படு‌த்துவத‌ற்கான வ‌ழி‌யி‌ன்மையு‌ம் பல நேர‌ங்க‌ளி‌ல் ‌ பி‌ள்ளை   க‌ள் வ‌ழி‌த்தவ‌றி‌ செ‌ல்ல வா‌ய்‌ ப்பா‌கி‌விடு‌கிறது.

இதனா‌ல் த‌ற்போது ஏ‌ற்ப‌ட்ட பெரு‌ம் பா‌தி‌ப்புதா‌ன் ஓ‌ரின‌ச் சே‌ர்‌க்கை போ‌ன்றவையாகு‌ம். த‌ங்களது ந‌‌ண்ப‌ர்களுடனு‌ம், தோ‌‌ழிகளுடனு‌ம் ந‌ட்பு ‌ ரீ‌தியா க‌ப் பழகு‌ம் பழ‌க்க‌ம், நாளடை‌வி‌ல் நா‌ன் இ‌ல்லாம‌ல் ‌நீ இ‌ல்லை, ‌நீ இ‌ல்லாம‌ல் நா‌ன் இ‌ல்லை எ‌ன்ற அள‌வி‌ற்கு‌ச் செ‌ன்று ஒருவ‌ர் ‌மீது ஒருவ‌ர் ஈ‌ர்‌ப்பு கொ‌ண்டு அது ஓ‌ரின‌ச்சே‌ர்‌க்கை வரை செ‌ன்று ‌விடு‌கிறது.

தா‌ம்ப‌த்ய‌ம் எ‌ன்ற அ‌ன்‌பி‌ன் ப‌ரிமா‌ற்ற‌த்தை ‌‌சில ந‌ண்ப‌ர்க‌ள் தவறாக‌ப் பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளவு‌ம் ஆர‌ம்‌பி‌த்து‌ விடு‌கி‌ன்றன‌ர். எனவே, இ‌ன்றைய இளைய சமுதாய‌ம், வா‌ழ்‌க்கை‌யி‌ன் அடி‌ப்படையை உண‌ர்‌ந்து, அத‌ற்கே‌ற்ப த‌ங்களை‌ப் ப‌க்குவ‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்வதுதா‌ன் ‌ சி‌ற‌ந்ததே‌ த‌விர, த‌ங்களது போ‌க்கு‌க்கு ஏ‌ற்ப சமுதாய‌த்தை மா‌ற்‌றி‌க் கொ‌ள்வது ‌சிற‌ந்த வ‌ழி அ‌ல்ல.

ஒரு ‌சில நா‌ட்களு‌க்கு மு‌ன் பு ‌மிக‌ப்பெ‌ரிய மரு‌த்துவமனை ஒ‌ன்‌றி‌ல் ஒரே பா‌லின‌த்தை‌ச் சே‌ர்‌ந்த இர‌ண்டு ந‌ண்ப‌ர்க‌ள் மரு‌த்துவரை ச‌ந்‌தி‌த்து, ஒரு வரை வேறு பா‌லினமாக மா‌ற்று‌ம்படி கே‌ட்டு‌ள்ளன‌ர்.

இதனை‌க் கே‌ட்டு அ‌தி‌ர்‌ந்து போன மரு‌த்துவ‌ர், ஏ‌ன் எ‌ன்று கே‌ட்ட த‌ற்கு, நா‌ங்க‌ள் இருவரு‌ம் நெடுநா‌ள் ந‌ண்ப‌ர்க‌ள். எ‌ங்களா‌ல் ஒருவரை ‌வி‌ட்டு ஒருவ‌ர் ‌‌பி‌ரி‌ந்‌திரு‌க்க முடியாது.

எனவே, ஒருவரை ம‌ட் டு‌ம் வேறு பா‌லினமாக மா‌ற்‌‌றி‌ வி‌ட்டா‌ல் நா‌ங் க‌ள் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்வோ‌ம் எ‌ன்று கூ‌றி யு‌ள்ளன‌ர். உடனடியாக அவ‌ர்களு‌க்கு கவு‌ன்‌சி‌லி‌ங் தர‌ப்ப‌ட்டு ந‌ல்ல மு றை‌யி‌ல் அ‌றிவுரை‌க் கூ‌றி அ‌னு‌ப்‌பி வை‌த்து‌ள்ளன‌ர் மரு‌த்துவ‌க் குழு‌வின‌ர்.

இ‌ந்த உதாரண‌ம் எத‌ற்கு எ‌ன்றா‌ல், வா‌ழ்‌க்கை‌யி‌ல் எ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ளி‌ல் தவறான முடிவுக‌ளை எடு‌த்து‌வி‌ட்டு க‌ண்‌ணீ‌ர் ‌விடுவது‌ண்டு.
‌சில தவறுகளை செ‌ய்யாம‌ல் த‌ப்‌பி‌த்து‌‌வி‌ட்டு ‌சில ஆ‌ண்டுக‌ள் க‌ழி‌த்து அ‌ந்த ‌நிலையை ‌நினை‌த்து‌ப் பா‌ர்‌த்து நாமே ‌ சி‌ரி‌த்தது‌ம் உ‌ண்டு. க‌ண்‌ணீ‌ர் ‌விடுவது‌ம், ‌‌நினை‌த்து‌ப்பா‌ர்‌ த்து  ‌சி‌ரி‌ப்பது‌ம் ந‌ம் கை‌யி‌ல்தா‌ன் உ‌ள்ளது

தீராத ஒற்றை தலைவலியா? தீர்வுகள்..!

கபாலம் வெடிக்குமாப் போல கிடக்கு என்று தலையைப் பிடித்துக் கொண்டு வருபவர் கள் பலர் இருக்கிறார்கள். ஒற்றைத் தலைவலி என்றும் மைகிரேன் என்று தாங்களே பெயர்சொல்லி க் கொண்டு வருபவர்களும் இருக்கிறார் கள்.
இருந்தபோதும் இவர்கள் எல்லோ ருமே உண்மையில் ஒற்றைத் தலைவலிக்காரர் அல்ல.

சாதாரண தலைவலியானது

  • தடிமன், 
  • மூக்கடைப்பு, 
  • மனப்பதற்றம், 
  • காய்ச்சல் 

போன்ற பல்வேறு நோய்களின்போது ஒரு அறிகுறியாக வெளிப்படுவதுண்டு.


ஆனால் ஒற்றைத் தலைவலி என்பது அவை போன்ற வெறும் தலைவலியல்ல. மிகவும் தனித்துவமான ஒரு நோயாகும். அந் நோய் இல்லாத தருணங்களிலும் கூட அது பற்றிய எண்ணம் வந்தால் பதற வைக்கக் கூடிய கடுமையான நோயாகும்.

தான் செய்து கொண்டிருப்பது எவ்வளவு முக்கிய வேலையானாலும் அதைக் கை விட்டுவிட்டு ஒதுங்குமளவிற்குத் தீவிரமானதாகும்.

வேறுபடுத்தும் அறிகுறிகள்

இத்தலைவலியின் சில தனித்துவமான பண்புகள் ஏனைய தலை வலிகளிலிருந்து வேறுபடுத்த உதவுகின்றன.

தூங்கமுடியாதபடி துடிதுடிக்கவைக்கும் மிகக்கடுமையான தலைவலி இது. படுவேகமாகக் குத்துவதுபோலவும், கூடிக் குறைந்து கொண்டிருப்பதுபோவும் தோன்றலாம்.

தலையின் ஒரு பக்கத்தி ல் மட்டுமே இது தாக்கு ம். பெரும் பாலனவர்க ளுக்கு தொடர்ந்து அதே பக்கத்திலியே தாக்கும்.

கண்ணின் உட்புறமாக வோ தலையின் பின்புற மாகவோ அன்றி கழுத் துப் பகுதியிலோ தாக்க க் கூடும்.

ஆரம்பிக்கும்போது மந்தமாக ஆரம்பித்து ஒரு சில நிமிடங் களிலோ சில மணி நேரத்திலோ தாங்கமுடியாதளவிற்கு அதிகரிக்கும்.

சில நிமிடங்களில் தணியாது. பொதுவாக 6 மணிநேரம் முதல் இரண்டு நாட்கள் வரை கூட தொடரும்.

பார்வை தொடர்பான சில சடுதியான தாற்காலிக மாற்றங் கள் ஒற்றைத் தலைவலி வரப்போகிறது என்பதற்கு கட்டி யம் கூறுவதுபோல வருவதுண்டு.


பார்க்கும் போது வெற்றுப்புள்ளி அல்லது கருமையான புள்ளிகள்
மங்கிய பார்வை,  கண் வலி,  நட்சத்திரங்கள் மின்னுவதுபோல அல்லது கோடுகள் வளைந்து வளைந் து செல்வதுபோல
ஒரு குழாயினூடாக அல்லது சுரங்கத் தினூமாகப் பார்ப்பது போலிருத்தல்.


இவற்றதை; தவிர திடீரெனக் குளிராக உணர்தல், அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு, சோர்வு களைப்பு, பசி யின்மை, குமட்டல் வாந்தி, விறைப்புத்தன்மை, வியர் வை, ஒளிகளைப் பார்க்கக் கூச்சம், அல்லது ஒலிகளைப் பொறுக்க முடியாமை போன்ற அறிகுறிகளும் இருக்கக் கூடும்.


தலைவலி வருவதற்கு முன்னர் சிலருக்கு, கொட்டாவி விடுவது, சிந்தனைத் தெளிவின்மை, குமட்டல் பேசும்போது சரியான வார்த்தைகளை கண்டுபிடிப்பதில் சிரமம் போன்ற எச்சரிக்கை அறி குறிகள் தோன்றுவதுண்டு.


சிலருக்கு தலைவலி நின்ற பின்னரும் கூட, மனம் சோர்வாக இருத்த ல், சிந்தனை தெளிலாக இல்லாதிருத்தல், தூக்கக் கலக்கம போன்ற உணர்வு, கழுத்து வலி என அதன் பாதிப்பு ஓரிரு நாட்களுக்குத் தொடர்வதுண்டு.
யாருக்கு வரும்

பொதுவாக குழந்தைப் பருவத்திலும் முதுமையிலும் வருவது குறைவு. 10 முதல் 45 வயதிற்கு இடைப்பட்ட காலத்திலேயே முதன் முதலில் தோன்றுவதுண்டு.

பொதுவாக ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிகமாக வருவ துண்டு.
ஒற்றைத் தலைவலி உள்ள பெண்களுக்கு அவர்கள் கர்ப்பிணியாக இருக்கும் காலங் களில் குறைவாகவே வருவது அவதானி க்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் பலருக்கு வருவதும் உண்டு.

தூண்டும் காரணங்கள் எவை?

மூளைக்கலங்களின் வழமைக்குமாறான செயற்பாடுகளால்தான் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிற து என நம்பப்படுகிறது. அதனால் நரம்பு பாதையிலும் மற்றும் இரசாயன மாற்றங்களாலும் இரத்தக் குழாய்களும் தசைநார்க ளும் இறுக்கமடைவதே தலை வலியை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு நிகழ்வதை பல விடய ங்கள் தூண்டுகின்றன. ஒருவரு க்கு எந்தெந்த விடயங்கள் தலை வலயைத் தூண்டுகின்றன என்பதை கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதன் கூலம் தலைவலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மனஅழுத்தம், பதகளிப்பு நோய், மனஅமைதியைக் குலை க்கும் சம்பவங்கள்.
சிலவகை மணங்களும் வாசனை த் திரவியங்களும்,
உரத்த சத்தங்கள், பிரகாசமான ஒளி உதாரணமாக கடும் வெயி லில் அலைவது,
மதுபானம், புகைத்தல் போன்றவை
பெண்களின் மாதவிடாய் சுழற்சி யின்போது ஏற்படும் ஹோர் மோன் மாற்றங்கள், கருத்தடை மாத்திரைகள்.
வழமையான தூக்க வழக்கங்களில் மாற்றங்கள், தூக்கக் குறைபாடு,
காலம் தவறிய உணவு, கடுமை யான உடற்பயிற்சி

சில வகை உணவுகள்

* பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஊறு காய் போன்ற புளித்த உணவுகள், மோனோசோடியம் குளுட்டாமேட் (MSG) கொண்ட உணவுகள்
* பேக் பண்ணப்பட்ட உணவுகள், சாக் லேட், விதைகள், கொட்டை கள், வேர்க்கடலை வெண்ணெய்,
* Tyramine கலந்த சிவப்பு ஒயின், நாட்பட்ட சீஸ், மீன், கோழி, ஈரல், போன்றவை
* அவகாடோ, வாழை, ஓரென்ஞ், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்
* வெண்காயம் சிலரில்

 சிகிச்சை

நீங்கள் ஓற்றைத் தலைவலி நோயாளியானால், அதைத் தூண்டும் காரணிகளை அனுபவத்தின் மூலம் கண்ட றிந்து அவற்றைத் தவிர்ப்ப தன் மூலம் நோய் தோன்று வதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

தலைவலி வந்துவிட்டால் சப்தமற்ற அமைதியான இடத்தில் ஆறுதல் எடுங்கள். ஒளி குறைவான அல்லது இருண்ட அறை உசிதமானது.
முடியுமானால் சற்று நேரம் தூங்குங்கள்.

கடுமையான தலைவலியானால் டிஸ்பிரின் போன்ற கரை யக்கூடிய அஸ்பிரின் மாத்திரை களில் இரண்டைக்கரைத்துக் குடியுங்கள். சிலர் இபூபுருவன் 400 மிகி மாத்திரை ஒன்றை உட்கொள்வதுண்டு.

வாந்தியும் கலந்திருந்தால் டொம்பெரிடோன் 10மிகி மாத்தி ரைகளில் இரண்டு அல்லது புரொமெதசீன் 25மிகி மாத்திரை யில் ஒன்று விழுங்கலாம்.

மிக அடிக்கடி தலைவலி வருவதாயிருந்தால் அதைத் தடுப் பதற்கு சில மாதங்களுக்கு தினசரி தடுப்பு மாத்திரைகள் உண்ணநேரலாம். அது மருத்துவ ஆலோசனையுடன் அவர து வழிகாட்டலில் மட்டும் செய்ய வேண்டியதாகும்

பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதற்கு என்ன காரணம்?

பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத்திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால் மகள் இப்பொழுது 10-12 வயதிலேயே அடைந்து விடுகிறாள்.

கடந்த சில தசாப்தங்களாகவே இம் மாற்றம் படிப்படியாக ஏற்பட்டுக் கொண்டு வருகிறது.

1800ன் நடுப் பகுதிகளில் அமெரிக்கப் பெண் குழந்தைகளில் முதல் மாதவிடாய் 17 வயதளவில் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
ஆனால் 1960 களில் 12 வயதாகக் குறைந்துவிட்டது.
காரணங்கள்

இதற்குக் காரணம் என்ன? பலரும் பலவாறு ஊகிக்கிறார்கள். அடிப்படைக் காரணம் முற்றும் புதியதான வாழ்க்கை முறைதான் என நம்பப்படுகிறது.

போஸாக்கான உணவு தாராளமாகக் அளவு கிடைக்கிறது.
இதனால் அவர்களது உடல் வேகமாகவும் அதிகமாகவும் வளர்ச்சியுறுகிறது.
எடை அதிகரிக்கிறது.

அதீத எடை ஹோர்மோன்களின் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
பருவமடையும் வயது முன் நகர்வதற்கு இது காரணம் எனலாம்.

இன்றைய வாழ்க்கை முறைகள் காரணமாக முன்னைய சமூகத்தினரை விட இன்றைய பிள்ளைகள் சிறு வயதிலேயே புதியவை பலவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். அனுபவிக்கவும் செய்கிறார்கள்.

தொலைக்காட்சி மற்றும் கணனி காரணமாக இன்றைய பிள்ளைகளில் அறிவு விருத்தி வேகமாக கிடைக்கிறது.
அதேபோல பாலியல் சம்பந்தமான அறிவும் விரைவில் கிட்டுகிறது. தொலைக்காட்சி, சினிமா ஊடாக இவை பற்றிய உணர்வுகளையும் பெறுகிறார்கள்.

இவையே பாலியல் ஹோர்மோன்கள் விரைவில் தூண்டப்படுவதற்கு மற்றொரு காரணம் என நம்பப்பட்டது.

இதைத் தவிர

குழந்தைகள் பாலகர்களாயிருக்கும் காலத்தில் சோயா சார்ந்த பால் மாக்களையும் போசாக்கு மாக்களையும் பிரதான உணவாக உட்கொள்வதும் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
சோயாவில் உள்ள பைற்ஈஸ்ரஜின் (Phytoestrogen) பெண்களின் ஹோர்மோனான ஈஸ்ரஜின்னை ஒத்தது. இது பொதுவாக உடலுக்கு நல்லது என்றே கருதப்படுகிறது. ஆயினும் குழந்தைகளில் சோயா சார்ந்தவை பிரதான உணவாக அமைந்தால் பாதகமாக அமையலாம் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

பரம்பரைக் காரணிகளும் அடங்கும். தாய் குறைந்த வயதில் பருவமடைந்தால் குழந்தைக்கும் அவ்வாறு நேர்வதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
புதிய கருத்து

ஆனால் கலிபோனியாவில் அண்மைய ஆய்வு (Young Girls’ Nutrition, Environment and Transitions -CYGNET) ஒன்றானது இதற்குப் புதிய ஒரு காரணமும் இருக்கலாம் எனச் சொல்கிறது.

பெற்ற தகப்பன் வீட்டில் இல்லாத பெண் குழந்தைகள் இளவயதிலேயே பருவமடைவதாக அது கூறுகிறது.
ஆனால் இது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. அதிக வருமானங்கள் உள்ள குடும்பங்களில் மட்டும்தான் இது அவதானிக்கப்பட்டது.
6 வயது முதல் 8 வயது வரையான 444 பெண் குழந்தைகளில் 2 வருடங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பருவமடைதல்
இந்த ஆய்வானது பருவமடைதல் (Puberty) பற்றியதே அன்றி பூப்படைதல் (Menarche) பற்றியது அல்ல. மார்பகங்கள் பெருப்பதையும், பாலுறுப்புகளை அண்டிய பகுதிகளில் முடி வளர்வதையுமே இந்த ஆய்வில் பருவமடைவதாகக் கொண்டார்கள்.


பூப்படைதல்

பூப்படைதல் என்பது முதல் முதலாக பெண்ணுறுப்பிலிருந்து குருதிக் கசிவு ஏற்படுவதாகும். அதாவது முதல் முதலாவது மாதவிடாய் ஏற்படும் நிகழ்வாகும். ஆனால் பருவடைதல் என்பது பூப்படைதலுக்கு முன்னோடியான நிகழ்வு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


Puberty, Menarche  ஆகிய சொற்களுக்கு இடையோயன பொருட்களைத் தெளிவுபடுத்தக் கூடிய சரியான தமிழ்ப் பதங்கள்  இருப்பதாகத் தெரியவில்லை. எனவேதான முறையே பருவமடைதல், பூப்படைதல், ஆகிய பதங்களை உபயோகப்படுத்தியுள்ளேன்.

தகப்பன் வீட்டில் இல்லாது இருப்பதற்கும் மகள் விரைவில் பருவமடைவதற்கும் இடையே என்ன தொடர்பு இருக்க முடியும்? தகப்பன் வீட்டில் இல்லாததால் உண்டாகக் கூடிய சமச்சீர் அற்ற குடுப்பச் சூழல் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

அப்படியானால் அது ஏன் அதிக வருமானம் உள்ள குடும்பங்களில் மட்டும் நடக்கிறது? குறைந்த வருமானங்களில் பொதுவாக குழந்தைகளைக் கவனிப்பதற்கான ஆதரவு சமூகத்திலிருந்து கிடைக்கிறது. பெற்றோர்களின் தாய் தகப்பன்மார் வீட்டில் இருந்து கவனப்பர். அல்லது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் கை கொடுப்பர்.

மற்றொரு காரணமும் கருத்தில் கொள்ளப்படுகிறது. மேலை நாடுகளில் வசதியான குடும்பங்கள் பலவற்றில் தாய் தனியாகவே வாழ்பவளாக இருப்பாள். குழந்தைகள் ஒற்றைப் பெற்றோர் குழந்தைகளாக இருப்பர்.

இதனால் தாய் நீண்ட நேரம் தொழில் செய்பவராக இருக்கக் கூடும் என்பதால் தாயின் ஆதரவு குழந்தைக்குக் கிடைப்பது குறைவாக இருக்கும். தாயுடனான நெருக்கமான உறவு குறைந்த பெண் பிள்ளைகள் விரைவாக பருவடைகிறார்கள் என வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

பெற்றோரின் ஆதரவு

இரு ஆய்வுகளையும் ஒன்றாகக் கருத்தில் கொண்டால் தாயோ, தந்தையோ எவராக இருந்தாலும் பெற்றோருடனான ஆதரவு குறைந்த பிள்ளைகள் விரைவில் பருவமடைகிறார்கள் என்பது புரிகிறது.

இது எமது சூழலுக்கான ஆய்வு அல்ல என உதறித் தள்ளுவது புத்திசாலித்தனம் அல்ல.

எமது சூழலிலும் குழந்தைகளுக்கு தாய் தகப்பனுக்கு அப்பால் பேரன் பேத்தி உறவினர்களின் ஆதரவும் அரவணைப்பும் குறைந்து வருகிறது. அதற்கு மேலாக இங்கும் எமது பெண் குழந்தைகள் முன்னைய விட விரைவிலேயே பருவமடைவது அதிகமாகி வருகிறது. எனவே இவ்விடயங்கள் பற்றிய அறிவு அவசியம்.

பாதகங்கள்

காலத்திற்கு முந்தி பெண்கள் பருவமடைவது பற்றி ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும். காரணங்கள் இருக்கின்றன.

எதிர்காலத்தில் இப் பெண்களுக்கு பாலுறுப்புகள் சம்பந்தமான புற்றுநோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.

ஆஸ்த்மா வருவதற்கான சாத்தியமும் அதிகமாகும்.
சமூக ரீதியாக அத்தகைய பெண் பிள்ளைகள் தவறான பாலியல் செயற்பாடுகளில் வயதிற்கு முன்னரே ஈடுபடுவதும், போதை பொருட்கள் பாவனையில் சிக்குவதும் அதிகம் என அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.

வகுப்பறை சிநேகிதர்களாலும் வெளி நபர்களாலும் இவர்கள் அதிகளவில் பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு ஆளாகுகிறார்கள். இதனால் சில குழந்தைகள் உளநெருக்கீடு, மனப்பதற்றம், மனச்சோர்வு போன்ற உளவியல் பாதிப்பிற்கு ஆளாக நேர்வது துர்ப்பாக்கியமே.

பருவமடைதலானது மூளை வளர்ச்சி நிறைவுறுவதுடன் தொடர்புடையது. எனவே காலத்திற்கு முந்திப் பருவமடைந்தால் மூளை வளர்ச்சி பூரணமடைவது பாதிப்படையலாம் எனவும் நம்பப்படுகிறது.
எனவேதான் ஆய்வாளர்கள் இப் பிரச்சனையில் அக்கறை காட்டுகிறார்கள்.

SOURCE: Journal of Adolescent Health, published online September 23, 2010

செக்சை வெறுக்கும் இளைய தலைமுறை! என்ன காரணம்?

செக்ஸ் வேண்டாத இளைய தலை முறை என்னவாயிற்று இவர்களுக்கு செக்ஸ் வேண்டாத இளைய தலை முறை

"'பிஞ்சிலை பழுத்திட்டுதுகுள். முளைக்க முதல் குஞ்சைப் பிடிச்சுக்கொண்டு திரியிதுகள். கொஞ்சம் வளர்ந்திட்டால் கடற்கரை பார்க் எல்லாம் முகம் உரச நாட்டியம் போடுதுகள். காலம் கெட்டுப் போச்சு".
இன்றைய இளைய தலைமுறையினர் பற்றிக் காட்டமாகப் பொரிந்து தள்ளினார் ஒருவர்.
உண்மைதான். மேலாடை தணிந்து இரு பூவுகுகள் மிதக்க, கீழாடை மேலேறி மதர்த்த தண்டங்கள் பளபளக்க தெருவெங்கும் இலவச கண்காட்சிகள் அரங்கேறும்போது, காலமும் நாமமும் நாறுவதை தவிர வேறு என்ன நடக்கும்.

ஆனால் அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? இன்றைய சூழலில் குழந்தைகள் விரைவிலே உடல் வளர்ச்சிடைகிறார்கள். பராயமடைவது முந்தி வருகிறது. கையைச் சூப்பி நிற்கும் காலத்திலேயே வேறெதையோ நாடும் காலமாகிவிட்டது.
உண்மையில் பாலுணர்வும் பாலுறவும் மனித வாழ்விற்கு இன்றியமையாதனவே.
காதல், காமம், புணர்வு, மகப்பேறு - இவை இல்லையேல் உயிரனத்தின் நீட்சி தடைப்பட்டுப் போகும். ஆனால் பாலுறவு ஆனாது மகப் பேற்றிற்கானது மாத்;திரமல்ல. அதற்கப்பாலும் அதன் மகத்துவம் தொடர்கிறது.
மனமகிழ்ச்சியைக் கொடுக்கிறது. சுயமதிப்பை மேம்படுத்துகிறது, பிறர்; மீதான அன்பிற்கும் காதலுக்கு வலுவூட்டுகிறது. மிக மகிழ்ச்சியான ஆரோக்கியமான பொழுதுபோக்காகவும் இருக்கிறது.
நெறி தவறி பாலியல் நோய்களைத் தேடிவாங்கும் உறவு பற்றி இங்கு நான் பேசவில்லை.
ஆனால் அண்மைய அறிக்கை ஒன்று பாலுறவு விடயத்தில் மனித சமுதாயத்திற்கு சிகப்பு சமிக்கை காட்டுகிறது.
செயற்பாட்டில் தளர்வு
இன்றைய இளைய சமுதாயத்தினர் பாலுறவில் ஈடுபடுவது படிப்படியாக் குறைந்து வருகிறதாம். முந்தைய தலைமுறையினரோடு ஒப்பிடும்போது இன்றைய தலைமுறையினர் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே செயலில் இறங்குகிறார்களாம். பார்க்கிறார்கள் பேசுகிறார்கள் ஆபாசமாகக் கிண்டலும் அடிக்கிறார்கள். வெளிப்படையாகக் கிலேசேமின்றி அது பற்றி கலந்துரையாடவும் செய்கிறார்கள்.
ஆனால் அதற்கு அப்பால் ..?
பிரித்தானியாவில் செய்யப்பட்ட 'வாழ்க்கை முறை மற்றும் பாலியல் மனப்பான்மை தொடர்பான கருத்து' ஆய்வில் இது கண்டறியப்பட்டது. ஆய்வைச் செய்தவர்கள் University College London ஆகும்.
16 முதல் 44 வயதுள்ளோர் உடலுறவில் ஈடுபடுவது கடந்த இரு தசாப்தங்களாகக் குறைந்து வருகிறதாம். இப்பொழுது பெண்கள் சராசரியாக மாதத்தில் 4.8 தடவையும் ஆண்கள் சராசரியாக 4.9 தடவைகளும் ஈடுபடுகிறார்களாம். பத்து வருடங்களுக்கு முன் இது முறைப்படி 6.3 ம், 6.2 ம் ஆக இருந்தததாம். அதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதுவே முறையே 6.1ம் 6.4 லும் ஆக இருந்திருக்கிறது.


சரி முதியவர்கள் என்ன செய்கிறார்கள்?;. முதியவர்கள் எனும்போது 65 முதல் 74 வயதானவர்களை இங்கு குறிக்கிறது. 'தேவாரம் திருவாசகம் ஜபம் தியானம், ஸ்தோத்திரம் என முக்திக்கு வழி தேடிக்கொண்டிருப்பார்கள்' என நினைக்கிறீர்களா?
இல்லை. அவர்களும் பாலுறவு வைக்கிறார்கள். வயதான பெண்கள் சராசரியாக மாதத்தில் 1.4 தடவையும் ஆண்கள் சராசரியாக 2.3 தடவைகளும் ஈடுபடுகிறார்களாம். அவர்கள் வயதிற்கு அது போதுமானதாக இருக்கலாம். முந்தைய தசாப்தங்களில் அவர்களது செயற்பாடு பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.
காரணங்கள் என்ன?
இன்றைய இளைய சமூதாயத்தினர் பாலுறவில் ஈடுபடும் எண்ணிக்கை குறைந்து செல்வதற்கு காரணம் என்ன?
நவயுகத்தின் அவசரமும், நேரமின்மையும் பன்முகமான சமூக ஈடுபாடுகளும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். தொழிலைத் தக்கவைத்திருக்க வேண்டியுள்ளது. பணத்தின் தேவைக்கு எல்லையே அற்றுப் போய்விட்டது. இதனால் ஏனையவற்றில் ஈடுபடுதல் குறைந்திருக்கலாம்.
அடுத்த காரணம் நவீன தொழில் நுட்ப வசதிகளாகும்.
ஒருவரில் ஒருவர் ஈடுபாடுள்ள இளைஞனையும் யுவதியையும் ஒரு அறையில் அடைத்து வைத்தால் என்ன நடக்கும்? கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து .... எல்லாம் நடக்கும்.
ஆனால் அந்த அறையிலேயே இணைய வசதியுடன் ஐபாட் அல்லது டப்லட் கிடைத்தால் நிலமை தழலகீழாக மாறிவிடும். டக் எனக் கிளிக் பண்ணி ஈ மெயிலை அல்லது மெசேஜைப் பார்ப்பார்கள். தனிப்பட்ட செய்திகள் முதல் உலக நிலவரங்கள் வரை எதையும் தான் தப்பவிட்டு விடக் கூடாது என்ற என்ற ஆழ்மன உந்துதல் காரணமாகும். ஆம் கம்பியில்லாமலே எங்கணும் கிடைக்கும் இணைய வசதி மனிதர்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது.
இப்பொழுது பாலுறவு கொண்டால் எவற்றையெல்லாம் இணையத்தில் இழக்க நேரிடும். தப்பவிடக் கூடாதவற்றைக் கவனித்துவிட்டு சற்று நேரம் தள்ளி உறவு கொள்ளலாமா என்று பலர் யோசிக்கும் அளவிற்கு நவீன தொடர்பு சாதன வசதிகள் மனித வாழ்விற்குள் ஆழ ஊடுருவிவிட்டன.
பேஸ்புக், வட்ஸ்அப், ரூவீட்டர் போன்றவை எங்கெங்கோ சிதறிக் கிடக்கும் மனித உறவுகளை உள்ளங்கையிற்குள் நெருங்கிக் கொண்டு வருவது உண்மைதான். ஆனால் தத்தமது கணனிகளுக்குள்ளும் ஐபாட்களிலும் மூழ்கிக் கிடப்பதால் அருகில் இருக்கும் சகமனிதர்களுடனான உறவுகளில் பாரிய விரிசலை ஏற்படுத்தி விடுகின்றன.
இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக் காட்டலாம். பாலியல் இன்று மறைபொருளாக இல்லை. வெளிப்படையாகப் பேசப்படுகிறது. மேலை நாட்டு ரீவீ சனல்களில் (Girls,  This is England) மட்டுமின்றி நீயா நானா போன்றவற்றில் கூட பேசப்படுகிறது. ஒரு காலத்தில் பேசக் கூசப்பட்ட விடயங்களான (LGBT - lesbian, gay, bisexual, and transgender)  இப்பொழுது அலசி ஆராயப்படுகின்றன. கள்ளத் தொடுப்புகள் வெளிப்படையாக விவாதிக்கப்படுகின்றன.
உணர்சியை முந்தும் அறிவியல்
பாலுறவு விடயத்தில் முற்காலத்தில் இருந்த ஒளிவு மறைவு, இரகசியத்தன்மை, பரஸ்பர அந்நியோன்யம் போன்றவை இன்று இல்லாமல் போய்விட்டது. அதிலிருந்த கள்ள நாட்டம் காணாதொழிந்துவிட்டது.
மறுவார்த்தையில் சொல்வதானால் பாலுறவு என்பது உணர்வு சார்ந்ததாக இருந்தமை குறைந்து அதில் அறிவியல் அம்சம் மேலோங்கி வருகுகிறது என்று சொல்லலாம். இவையும் பாலுறுவில் நாட்டம் குறைவதற்கு காரணமாகலாம்.
மிகையான எதிர்பார்ப்புகளும், அதீத சிந்தனைகளும் முன்பு வெளிப்பiடாயகப் பேசத் தயங்கிய விடயத்தை கூறுபோட்டு பகுத்தறிய விளையும் அறிவியல் தேடல்களும், செயலூகத்தைப் பின்தள்ளிவிட்டது.
"காமம் பாலுணர்வு புணர்தல் போன்ற செயற்பாடுகள் உயிரனத்தின் அடிப்படையான மிருக இயல்பு ஆகும். மனிதன் கூர்ப்பில் மிகவும் மூத்த உயிரினம். தனது மூளைத்திறனினல் தங்கியிருப்பவன் கீழே மறைந்து கிடக்கும் அசிங்கத்தை நாடுவது அவனது அறிவாற்றலுக்கு இழுக்கு" போன்றதான மறைமுக உணர்வும் இளைய சமுதாயத்தில் மேலோங்கி வருகிறது. இவையும் அவர்களது பாலியல் செயற்பாட்டை பின்தள்ளுவதாகக் கொள்ளலாம்.
காலையில் நல்லதா, கும்மிருட்டில் நல்லதா, மேலேயா கீழேயா உச்சம் கிடைக்கும், கண்களை மூடியிருப்பதா, விழித்திருப்பதா, கால்களை அகட்டி வைப்பதா ஒடுக்குவதா? இவை போன்ற கேள்விகளுக்கான விடைகளை இணையத்தில் தேடுவதும், டம்ளரிலும் ரூவீட்டரிலும் நண்பர்களிடம் விவாதிப்பதுமாக இருப்பார்கள்.
பாலுறவுச் செயற்பாடு பற்றிய மனப்பதற்றதைக் இவை கிளறிவிடுகின்றன. எல்லாவற்றையும் சரிசெய்துகொண்டு 100 சதவிகித பெறுபேறு கிட்டக் கூடிய நிலையில்தான் உடலால் சுகிக்க வேண்டும் என எண்ணினால் அது நடக்கக் கூடிய காரிணமா?
எனவேதான் மனிதனின் இயல்பான உயிரியல் செயற்பாடுகளை அறிவியல் ரீதியாக நுணிகி ஆயப் புகுவது தோல்வியிலேயே முடிகிறது. இன்னொரு சகமனிதரிலிருந்து பெறக் கூடிய இன்பங்கள் எவை என்பதையும், அவற்றின் பலாபலன்களையும், அதை எப்படிச் செய்தால் தனக்கும் மற்றவருக்கும் பூரண திருப்தி கிட்டும் என்பதை இணைங்களில் தேடிக்கொண்டிருந்தால் கணனியோடும் ஐபாட்டோடும் புணருவதல்தான் முடியும்.
மொத்தத்தில் பார்த்தால் இன்றைய இளைய தலைமுறையியனர் செக்ஸ் பற்றி அதிகமாகவே சிந்திக்கின்றனர். ஆனால் வேலையால் வீடு திரும்பியதும் ரீவீ பார்க்கிறார்கள், இணையத்தில் மூழ்குகிறார்கள். எல்லாம் முடிய கண்கள் சுழல சோர்ந்து படுத்துவிடுகிறார்கள்;. நேரமிருந்தால் மட்டுமே செக்ஸ் உறவு என்றாகிவிடுகிறது.
ஆய்வு தெளிவுறுத்தும் வேறு விடயங்கள்
பிரித்தானியாவில் செய்யப்பட்ட ஆய்வானது இளைஞர்களது பாலியல் நாட்டம் பற்றி மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூகத்தின் பாலியல் சம்பந்தமான வேறு பல விடயங்களையும் சுட்டிக் காட்டுகிறது.


மிக இளவயதிலேயே ஆரம்பித்துவிடும் செக்ஸ் உறவுகள் முதுமையிலும் (74வயது) தொடர்கிறது தன்னினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்ளும் தன்மை அதிகரித்து வருகிறது. அதே நேரம்; திருமணத்திற்கு அப்பாலான பாலுறவை ஏற்கும் தன்மை குறைந்துவருகிறது. பாலியல் உறவுப் பிரச்சனைகள் இருபாலாரிலும்  10 ல் 4 பேருக்கு இருக்கிறதாம். இருந்தபோதும், 10ல் ஒருவரே அதனால் கவலைப்படுவதாகவோ மனஉழைச்சலுக்கு ஆளாவதாகவோ கூறினார்கள். பாலுறவில் நாட்டமின்மையையே 15 சதவிகிதமானவர்களின் முக்கிய பிரச்சனை இருந்திருக்கிறது. அதிலும் பெண்கள் ஆண்களை விட இரு மடங்காக பாலுறவு நாட்டமற்றுக் காணப்பட்டார்கள். விருப்பதிற்கு மாறாக உடலுறவு வைக்க வேண்டிய நிலை பலருக்கு ஏற்பட்டு இருந்திருக்கிறது. பெண்கள் அதிக பாதிப்பிற்கு ஆளான போதும் ஆண்களும் தப்பவில்லை. 10 பெண்களில் ஒருவர் இஷ்டமின்றி உடலுறுவு வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்த அதே நேரம், 70 ஆண்களில் ஒருவருக்கு அத்தகைய நிலை ஏற்பட்டதாம். எந்தப் பெண்ணைக் கண்டாலும் புணரும் வேட்கையோடு திரியும் எமது சமூகச் சூழலோடு ஒப்பிடும்போது இத்தகவல் ஆச்சரியம் அளிக்கிறது. பிரித்தானியாவில் ஏற்படும் கருத்தங்கல்களில் ஆறில் ஒரு பங்கு எதிர்பாராததாக (திட்டமிடப்படாததாக) இருக்கிறது. மற்றொரு விதத்தில் பார்த்தால் 60 பெண்களில் ஒருவர் எதிர்பாராதவிதமாக கருத்தங்கலுக்கு ஆளாகிறார்கள். கருக்கலைப்பு சட்டபூர்வமாக இருக்கும் பிரித்தானியாவில் இது பாரிய சிக்கலை ஏற்படுத்தாது.
ஆனால் மதம் புனிதத்துவம் கண்ணியம் எனப் மேடைக்கு மேடை பேசிக் கொண்டு இருளில் பெண்களைக் குதறி எடுக்கும் நம்நாட்டில் சட்டவிரோத கருக்கலைப்புகளால் பலியாகும் பெண்களின் எண்ணிக்கை தூய்மைவாதிகளின் கண்ணில் படுவதில்லை. சிறுவர் துஸ்பிரயோகம் பாலியல் வன்புணர்வு போன்றவற்றால் கர்ப்பமுறும் பெண்களின் துயரம் கவனத்தில் கொள்ளப்படாத ஒரே புனித பூமி சிறிலங்காவாத்தான் இருக்கும்.
என்ன சொல்ல என்ன சொல்ல இன்னும் சொல்லி நீங்கள் அழ........